முதலாமாண்டு மாணவர்கள் ஆற்றுப்படுத்தும் நிகழ்ச்சி – இரண்டாம் நாள் நிகழ்வு

02 Jul 2026

முதலாமாண்டு மாணவர்களின் ஆற்றுப்படுத்தும் நிகழ்ச்சியின் இரண்டாம் நாள் நிகழ்வாக தமிழ், ஆங்கிலம், கணிதம், வணிகவியல், கணினி அறிவியல் ஆகிய துறைகளைச் சார்ந்த துறைத்தலைவர்கள் முனைவர். ச. அமுதவல்லி, பேரா. ச. முத்துக்குமார், பேரா. அ. திருமுருகன், முனைவர். தா. நாகலெட்சுமி மற்றும் முனைவர். அ. நித்யா ஆகியோர் துறை சார்ந்த கல்வி குறித்தும், மாணவர்களின் எதிர்கால வேலைவாய்ப்பு குறித்தும் விரிவுரைகளை நிகழ்த்தினர்.

பிற்பகல் அமர்வில் கல்லூரி மாணவர்களுக்கான 'நான் முதல்வன்' பாடத்திட்டம் குறித்து அனைத்துத் துறை மாணவர்கள் பெற வேண்டிய பொதுவான விழிப்புணர்வு குறித்து முனைவர் தா. நாகலெட்சுமி விரிவுரை நிகழ்த்தினார்.

கல்லூரியில் நடைபெறும் அகமதிப்பீட்டுத் தேர்வு மற்றும் பல்கலைக்கழகத் தேர்வு குறித்து பேராசிரியர் ச. முத்துக்குமார் விளக்கவுரை நிகழ்த்தினார்.

இரண்டாம் நாள் நிகழ்வுகளை முறையாகத் தொகுத்து வழங்கி, விழாவின் நிறைவாக வணிகவியல் துறைப் பேராசிரியர் முனைவர். மு. அமுதா அவர்கள் நன்றியுரை வழங்கினார்.